பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிலிப் என்பவர். ஒருமுறை இவரது பணத்தை ஒருவன் திருடினான். பலரும் இது பற்றி அவரிடம் விசாரித்தனர். “எனக்கு இல்லாத கவலை உங்களுக்கு ஏன்? என் சட்டையில் இருந்த பணத்தை தான் அவன் எடுத்துள்ளான். என் வங்கி கணக்கிலோ, வீட்டிலோ இருந்த பணத்தை திருடவில்லை. மேலும் அவன், கத்தியைக் காட்டி மிரட்டவோ, அச்சுறுத்தவோ இல்லை. ஒருவேளை நான் பணத்தை தர மறுத்திருந்தால், என்னைக் கொன்றிருக்கலாம். அப்படி ஆபத்து வராமல் ஆண்டவர் காப்பாற்றியதற்கு நன்றி. அதனால் இழந்ததை எண்ணி வருந்தவில்லை” என்றார். இவரைப் போல நேர் கொண்ட பார்வையுடன் வாழ்வோம்.