பதிவு செய்த நாள்
26
அக்
2019
12:10
புதுச்சேரி: குருபெயர்ச்சி விழாவையொட்டி, வரும் 29ம் தேதி, மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு, யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்படுகிறது. குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கும் குரு பெயர்ச்சி விழா, வரும் 29ம் தேதி அதிகாலை 3:18 மணிக்கு நடக்கிறது.
அதையொட்டி, புதுச்சேரி – திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி மஹாயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் குரு பெயர்ச்சி பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியமும், மாலையில் நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான பொருட்கள் கொண்டு அபிேஷகங்கள் நடத்தப்படுகிறது. குரு பெயர்ச்சி தினமான 29ம் தேதி அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் துவங்குகிறது.
குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது. விழாவில், குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, அன்னதானமும், 1008 குட பால் அபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.