தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்ட விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்யும் வைபவம் நடைபெற உள்ளது. சூரசம்ஹார விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.