Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூரில் மணவாள மாமுனிகள் ... மேனி வியர்த்த சிக்கல் சிங்காரவேலவர்: பக்தர்கள் பரவசம் மேனி வியர்த்த சிக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா: ஆரத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா: ஆரத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

02 நவ
2019
10:11

திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா நேற்று துவங்கியது. வரும் 4ம் தேதிவரையிலும் நடக்கிறது. தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்தது. தாமிரபரணி துவங்கும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையிலுமாக பல்வேறு படித்துறைகள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு ஆண்டு நிறைவு புஷ்கர விழா நேற்று துவங்கியது. இதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று முன்தினம் திருப்புடைமருதுார் வருகை தந்தார். அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலையில் சந்திரமவுலீஸ்வரர் பூஜையில் பங்கேற்றார்.

தொடர்ந்து பகலில் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்றார். மாலையில் மீண்டும் திருப்புடைமருதுார் சென்றார். மகாபுஷ்கர விழா கமிட்டி சார்பில் திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபத்தில் நேற்று காலையில் கால்நாட்டு விழா நடந்தது. மாலையில் சிறப்பு பூஜைகள், ஆரத்தி நடந்தது. புஷ்கர நிறைவு விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், திருபனந்தாள் ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிக தலைவர்கள் பங்கேற்றனர். புஷ்கர விழா நிறைவு 4ம் தேதி மாலையில் நடக்கிறது. திருநெல்வேலி ஜங்ஷன், தைப்பூசமண்டபம் முன்பாக நேற்று இரவில் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர நிறைவு விழா ஆரத்தி நடந்தது. திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூசமண்டபம் முன்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நிறைவு விழாவிற்கான கால்கோள்விழா நடந்தது. திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பாக தாமிரபரணியில் நடந்த புஷ்கர நிறைவு விழாவில் காஞ்சி காமகோடி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar