Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா: ஆரத்தி ... ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அறிவிப்பு பதாகை வைத்தது நிர்வாகம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அறிவிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேனி வியர்த்த சிக்கல் சிங்காரவேலவர்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2019
11:11

நாகப்பட்டினம் : சூரசம்ஹாரத்திற்காக, முருக பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி, சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், நேற்றிரவு நடந்தது.

Default Image
Next News

அப்போது, முருகனின் மேனி வியர்த்தது, பக்தர்களை பரவசத்திற்கு உள்ளாக்கியது.நாகை அடுத்த சிக்கலில், பிரசித்தி பெற்ற, சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சூரசம்ஹாரம் இக்கோவிலில் தான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கிய முருகப்பெருமான், திருச்செந்துாரில் சூரனை, சம்ஹாரம் செய்தார் என்பது, கந்தபுராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், கந்தசஷ்டி விழா, 28ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டியின், ஐந்தாம் நாள் விழாவான நேற்று, சிங்காரவேலவர் தேவியருடன், திருத்தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்றிரவு, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மெய்சிலிர்த்தனர் அன்னையிடம், சக்திவேலை பெற்று, தம் சன்னிதியில் அமர்ந்த முருகப்பெருமானின் திருமேனியில், வியர்வை பூத்தது. சன்னிதியின் சுவர்களிலும், வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து, இரவு, 12:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar