ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக யாகம் நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி ஆறு நாள் நடத்தினர். யாகத்தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதம் ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒன்றாக்கிட முருகன் அவதரித்தார். இந்நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. தேவர்கள் வலிமை பெறவும், முருகன் அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து விரதமிருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்புரிந்தார். இதனடிப்படையில் சஷ்டி கொண்டாடப்படுவதாக கந்த புராணம் சொல்கிறது.