Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை மாரியம்மன் பொங்கல் விழா: 200 ... நேர்த்திக்கடன் மண்பொம்மை விற்பனை மும்முரம் நேர்த்திக்கடன் மண்பொம்மை விற்பனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி, தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி, தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

08 நவ
2019
12:11

ராசிபுரம்: ராசிபுரம், நித்யசுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா மற்றும் தேர் திருவிழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. மற்ற மாரியம்மன் கோவில்களில் திருவிழா நாட்களில் மட்டுமே அம்மன் தாலி அணிந்திருக்கும். ஆனால், இங்குள்ள மாரியம்மன் கழுத்தில், 365 நாட்களும் தாலி இருப்பதால், நித்யசுமங்கலி மாரியம்மன் என அழைக்கப்படுகிறது.

இக்கோவில், தேர் திருவிழா, ஐப்பசி மாதம் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, 10 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு ஒவ்வொரு சமுதாயம் சார்பிலும் சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதிகாலையில், இதற்காக வெட்டப்பட்ட தீக்குழியில் பக்தர்கள் இறங்கினர். பிரார்த்தனைக்காக கையில் தீச்சட்டி மற்றும் வாயில், 12 அடி அலகு குத்திக்கொண்டும், குழந்தைகளை தூக்கி கொண்டும் பக்தர்கள் தீ மிதித்தனர். முன்னதாக, பக்தர்கள் கோவிலைச் சுற்றி உருளுதண்டம் போட்டனர். மாலை, தேரோட்டம் தொடங்கியது. தாசில்தார் பாஸ்கரன், நகராட்சி ஆணையர் கணேசன், அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். கடை வீதி வழியாக வந்த தேர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று, மீண்டும் வடம் பிடித்து தேரை நிலை நிறுத்துவர். நேற்று முன்தினம், ஆர். புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. இதில், பக்தர்கள் வருவான் வடிவேலன் அலகு குத்தி வந்து தீ மிதித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar