Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நட்டாற்றீஸ்வரர் கோவில் சித்திரை ... சூரம்பட்டி கோவில் பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நாராயணர்கோவிலில் மலர் வேள்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2012
12:04

ஈரோடு:ஈரோடு, லக்காபுரம் புதூர் லட்சுமி நாராயணர் கோவிலில், தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மலர் வேள்வி நடந்தது.கோவில் வளாகத்தில், கும்பங்கள் வைத்து, மலர்கள், கனிகள் படைக்கப்பட்டு, சூரிய பூஜை நடந்தது. கன்றுடன் பசுவுக்கு கோபூஜை, குதிரைக்கு பூஜை நடந்தது.

மூலவர் லட்சுமி நாராயணருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன. அலங்காரத்துக்குப் பின், துளசி, மரிக்கொழுந்து, செவ்வந்தி, மல்லிகை, ரோஜா, அரளி, தாமரை, பிச்சி போன்ற பூக்களால், வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு மலர் வேள்வி நடத்தப்பட்டது. பின் கனிகள் சமர்ப்பித்து சிறப்பு பூஜை நடந்தது.

"நந்தன ஆண்டுக்கான புதிய பஞ்சாங்கத்தை வாசித்து, கோவில் அறங்காவலர் ஜோதிடர் சுயம்பிரகாஷ் கூறுகையில், ""சித்திரைப் பிறப்பு என்பது சூரியனுக்கான வழிபாடு. மழை வளமும், பயிர்கள் செழிப்பும் ஏற்பட காரணமாக சூரியனுக்கு நன்றி கூறி, அவரை பிரார்த்திப்பதாகும். பூமி வளமாவதன் அடையாளமே கனிகள்தான். கனிகளை இறைவனுக்கு சமர்ப்பிப்பதே, "விஷு கனி என்பதாயிற்று.

வேள்வி என்பது அக்னியில் செய்வது மட்டுமல்ல; மலர்களாலும் வேள்வி நடத்தலாம். எட்டு வகையான மலர்களைக் கொண்டு இறைவனுக்கு வேள்வி நடத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) பிறந்துள்ள "நந்தன ஆண்டு என்பதில், "நந்தன என்றால் "குழந்தைகள் எனப்பொருள். இந்தாண்டில் குழந்தைகள் ஆரோக்கியமும், சிறந்த கல்வியும், அறிவாற்றலும் பெற ஏற்ற ஆண்டாக அமைய, நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம், என்றார்.ஏற்பாடுகளை, லட்சுமி நாராயணர் கோவில் பவுர்ணமி வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar