Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனத்தில் ஐப்பசி மாத ... ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 நவ
2019
12:11

சென்னை : ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. தட்சனின் சாபத்தால், 16 கலைகளை இழந்த சந்திரன், விமோசனம் பெற ஈசனை நாடினார். அவரின் கலைகள் தேயவும், வளரவும், ஐப்பசி மாத பவுர்ணமி அன்று, 16 கலைகளையும் பெற்று மிளிரவும் வரம் பெற்றார்.சகல கலைகளையும் சந்திரன் பெற்று, ஐப்பசி பவுர்ணமி நாளில், அவருக்கு உரிய தானியமான அரிசியால், ஈசனுக்கு அன்னம் செய்து, அபிஷேகம் செய்வதாக ஐதீகம்.

கல்லினுள் உள்ள தேரைக்கும், கருப்பையில் உள்ள ஜீவனுக்கும், உணவு அளிப்பவர் ஈசன். அனைத்து ஜீவன்களுக்கும் உயிர் நாடி அன்னம். அதுவே, பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக விளங்குவதாகவும் வேதங்கள் கூறுகின்றன.இதன் அடிப்படையிலேயே, ஒவ்வொரு ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ரத்னகிரீஸ்வரர் கோவில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதம், பவுர்ணமி அன்னாபிஷேகம் விமரிசையாக நடத்தப் படுகிறது.இந்தாண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல், கோவில் வளாகம், பக்தர்களால் வழங்கப்பட்ட, டன் கணக்கிலான காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டன.நேற்று மாலை, 5:00 மணிக்கு, மூலவர் ரத்னகிரீஸ்வரர் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு மகா தீபாராதனை நடந்தது.

விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அருள் பெற்றனர்.மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக நிகழ்வு அனைத்தும், நேற்று மாலை, 5:30 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காய்கறிகள், பழங்கள், அரிசி மூட்டைகள் அனைத்தும், 40க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகின்றன.


கோலாகலம்: சென்னை நகரில் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்; திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில்; சிந்தாதிரிப்பேட்டை, ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது. - நமது நிருபர்- -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar