Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் ...  பூங்குணம் வராகி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு  பூங்குணம் வராகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்.. எதிர்க்கட்சிக்கு ராஜயோகம்: ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கத்தில் தகவல்
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்.. எதிர்க்கட்சிக்கு ராஜயோகம்: ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கத்தில் தகவல்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
11:04

ராமேஸ்வரம்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். எதிர்க்கட்சிக்கு ராஜயோகம் ஏற்படும். ஆளும்கட்சி மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் குருக்கள் பஞ்சாங்கம் வாசிப்பின்போது தெரிவித்தார். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார்.


அப்போது அவர் கூறியதாவது : உலக நாடுகள் குறிப்பாக வல்லரசு நாடுகள் வியக்கும் வகையில் இந்திய பொருளாதாரம், பாதுகாப்பு துறையில் வளர்ச்சி அடையும். கார்கள் உற்பத்தி அதிகரித்து விலை குறையும். புயல் உருவாகி கனமழை பெய்து நீர்நிலைகள் பெருகும். விவசாயத்தில் மஞ்சள், பால், வெங்காயம், தக்காளி, பூண்டு உற்பத்தி அதிகரிக்கும் விலை குறையும். ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, உள்ளிட்ட சில வட மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும். மீண்டும் பெரும் தொற்று நோய் பரவி மக்கள் பாதிப்படுவார்கள். எல்லை ஓரத்தில் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு நடக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் ஏற்படும். ஆளும் கட்சியில் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரிவை சந்திப்பார்கள். சாலை விபத்து அதிகரிக்கும். ஈரான், இஸ்ரேல் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என தெரிவித்தார். இதன்பிறகு சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பேஷ்கார் கமலநாதன், வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 
temple news
காஞ்சி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் வந்தடைந்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar