சபரிமலையில் முதியவர்களுக்கு நேரடி தரிசனம்: அரசுக்கு பரிந்துரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2019 12:11
சபரிமலை: சபரிமலையில், வரிசையில் நிற்காமல் முதியவர்கள் நேரடியாக தரிசனம் நடத்த வழி செய்ய அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரைத்துள்ளது.
சி.கே. நாணு எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டசபை குழு பம்பையில் ஆய்வு நடத்தியது. பம்பையில் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியது: பம்பையில் பக்தர்கள் குளிக்க தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். பெண்கள் பம்பையில் குளித்து விட்டு உடைமாற்றம் செய்ய கூடுதல் வசதி செய்ய வேண்டும். பம்பை - சன்னிதானம் டோலி கட்டணம் ஒழுங்குபடுத்த வேண்டும். பம்பையில் பக்தர்கள் வீசுகின்ற துணிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சபரிமலை வரும் முதியவர்கள் வரிசையில் நிற்காமல் தரிசனம் செய்ய வசதி செய்ய வேண்டும். இந்த பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.