* பலமுறை வற்புறுத்திய பின் ஒரு செயலை முடிப்பது பண்பாகாது. தானே தனக்குரிய கடமையைச் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி. * மனம் உற்சாகமுடன் இருக்க அதிகாலையில் எழுவதே நல்லது. * பெரியவர்கள் இருக்குமிடத்தில் பேசும் போது, வாதங்களை முகத்தில் அடித்தாற் போல சொல்ல கூடாது. * கணவர், குடும்பம், தர்மம் என நல்லனவற்றைக் காப்பதே பெண்களுக்கு பெருமை. * கெட்டவருக்கு உதவினால் அழிவு உண்டாகும். நல்லவருக்கு உதவினால் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்கும். * நல்ல நூல்கள், பெரியோரின் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க கூடாது. * நல்லவரைக் காண்பது, அவரது அறிவுரை கேட்பதும், அவரோடு பழகுவதும், அவரது நற்குணத்தைப் புகழ்வதும் நன்மையளிக்கும். * பெரிய மடல்கள் கொண்ட தாழம்பூவை விட, சிறிய இதழ்கள் கொண்ட மகிழம்பூவிற்கு மணம் அதிகமுண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் தாகம் தணிக்காது. ஆனால் ஊற்று நீர் குறைவாக இருந்தாலும் குடிக்கலாம். * பொன் குடம் உடைந்த பின்னும் பொன்னாகவே இருக்கும். அது போல பண்புள்ள செல்வந்தர் வறுமை அடைந்தாலும் முடிந்த வரை உதவிகளை செய்வர். * உடலோடு பிறந்து நோய் நம்மைக் கொல்கிறது. அதுபோல உடன்பிறந்தவர்களால் தீமை ஏற்படலாம். எங்கோ மலையில் விளைந்த மூலிகை நோய் தீர்ப்பது போல அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் கூட நமக்கு உதவலாம். * கல் பிளந்தால் மீண்டும் இணையாது. கோபத்தால் பிரிந்த கெட்டவர்கள் சேர மாட்டார்கள். நீரில் ஏற்பட்ட பிளவு தோன்றிய பொழுதே மறையும். அது போல நல்லவர்களின் கோபம் உடனே மறையும். - அறிவுறுத்துகிறார்அவ்வையார்