""நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!” என்னும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தைப் படித்து அன்றாடப் பணிகளைத் தொடங்குவது சிவனடியார்களின் வழக்கம். ""சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து ” என்கிறது சிவபுராணம். இப்பாடலை பொருள் புரிந்து பாடுவோர் சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவர் என்பது இதன் பொருள். வழிபாட்டுப் பாடல்களை அர்த்தம் புரிந்து பாடுவதே சிறப்பு.