Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி 15ம் நாள் வழிபாடு.. எல்லே ... அம்பரமே தண்ணீரே.. மார்கழி 17ம் நாள் வழிபாடு அம்பரமே தண்ணீரே.. மார்கழி 17ம் நாள் ...
முதல் பக்கம் » செய்திகள்
மார்கழி 16ம் நாள் வழிபாடு: நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய..
எழுத்தின் அளவு:
மார்கழி 16ம் நாள் வழிபாடு: நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய..

பதிவு செய்த நாள்

31 டிச
2019
12:12

உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள, பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தை ஒட்டி, ஆண்டாள் நமக்கு அருளிய திருப்பாவையின், 16ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புபழமையான இக்கோவிலில் அருள்பாலித்து வரும், கரிவரதராஜ பெருமாள் மற்றும் பூவராக பெருமாளை, செவ்வாய்கிழமையில் துவரம்பருப்பு, முழுமுந்திரி, செவ்வரளிப்பூ, எலுமிச்சை ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னை, நிலம் விற்பது, வாங்குவது, சொத்து வில்லங்கங்கள் தீரும். நிலத்தின் ஒரு பிடி மண் எடுத்து வந்தும் வழிபடலாம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு, நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய... என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்இடையர் குலத்துக்கெல்லாம் ஒப்பற்ற நந்த கோபாலனது திருமாளிகையின் வாசலை காத்து நிற்கும் வாயில் காப்போனே...கொடிகள் பறக்கும் தோரணங்கள் கட்டப்பட்ட வாயிலின் காவலனே... மணிகள் ஒலிக்கும் மணிக்கதவின் தாளை திறப்பாய்.பலவித மாயச் செயல்களைச் செய்பவனும், நீல நிற கண்களையும் உடைய கண்ணன், இடைக்குலச் சிறுமியரான எங்களுக்கு, நோன்புக்குரிய பரிசு தருவதாக நேற்றே வாக்களித்துள்ளான்.ஆதலால், அவனை மனத்துாய்மை, உடல் துாய்மை உடையவராய் வந்து அவள் உறக்கம் நீங்கி எழுந்தருள, திருப்பள்ளி எழுச்சி பாட வந்துள்ளோம். நீ மறுக்காது, கதவை திறப்பாய் என வாயில் காப்போனை வேண்டுகின்றனர் ஆயர் பாடிச் சிறுமிகள் என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar