Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச திருவிழாவுக்கு தயாராகும் ... பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் 58 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2020
11:02

தலைவாசல்: ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், 58 ஆண்டுக்கு பின், இன்று, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பூஜை நடந்து வருகிறது. 850 ஆண்டுக்கு முன், பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில், 1962, செப்., 6ல், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், தற்போது கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, 58 ஆண்டுக்கு பின், இன்று காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று, வாணகோவரையன் வம்சா வளியைச் சேர்ந்த, பொள்ளாச்சி அருகே, சமத்தூரிலுள்ள சங்கர் வாணகோவரையன், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவர் குடும்பத்தினருடன், தன் முன்னோரான பொன்பரப்பின வாணகோவரையன், அவரது மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின், அவர், கும்பாபிஷேக விழா மலர் நூலை வெளியிட, கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இரவு, 8:00 மணிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவிலில் வழிபாடு செய்தார். அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளித்தனர். தொடர்ந்து, கோபுரத்தில் வைக்கும் கலசங்களை, புனிதநீரை சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்து, கோவிலில் வைத்து வழிபட்டனர். இன்று, கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் செய்து வைக்கவுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar