Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலேஷியா, பத்துமலை முருகன் கோவிலில் ... ஒரு லட்சம் வடை மாலை அலங்காரத்தில் ஞானபுரி ஆஞ்சநேயர் ஒரு லட்சம் வடை மாலை அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பழநியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2020
05:02

பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநியில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தைப்பூச விழாவை முன்னிட்டுபாதயாத்திரை பக்தர்கள் பழநி நகரெங்கும் வந்து குவிந்துள்ளனர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா பிப்.,2ல் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்த ஆட்ட பாட்டத்துடன் வருகின்றனர். ஒட்டன்சத்திரம்- - பழநி ரோட்டில் பக்தர்கள் அணிவகுத்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பழநி அடிவார பகுதி தங்கும் விடுதிகள், மடங்கள், திருமண மண்டங்கள் நிரம்பி வழிகின்றன.

பாதையோரங்களிலும் பக்தர்கள் தங்கியுள்ளனர்.வின்ச், ரோப்கார் ஸ்டஷேன், கிரிவீதிகள் மட்டுமின்றி, மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரையிலும் பக்தர்கள் பல மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் வழி ஒருவழிப் பாதையில் செல்வதால் அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு சிரமம் உண்டானது. இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டதால் அப்பகுதியில் செல்ல முடியாமல் பலரும் தவித்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அன்னதானம், குடிநீர், பானங்கள், பழங்கள் வழங்கினர்.

தேரோட்டம்: தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று (பிப்.,8) மாலை 4:30 மணிக்கு ரதவீதியில் தைப்பூச கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar