* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக செயல்படக் கூடாது. சொல்லும், செயலுக்கும் ஒன்றுபடுத்து. * பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே துாய்மை மிக்கது. * நிழல் போல் மனிதனைத் தொடரும் ஆணவத்தை விட்டு விலகுவது எளிதல்ல. * அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அது போல ஆசையற்ற ஞானிகள் மீண்டும் பிறப்பதில்லை. * கண்ணிரண்டும் கண்ணாடி போல மனதில் இருப்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும். * அறிவால் ஆராய்ச்சி செய்வன் கடவுளை அறிய முடியாது. * கடவுள் ஒருவரே சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் வெறும் பொய்யே. * கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது. * கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜபிப்பதற்குரிய தகுதி துாயபக்தி. * அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவன் சமநிலை இழப்பதில்லை. * விவேகம், வைராக்கியம் இல்லாதவன் ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியாது. * வெளியுலகத்திற்கு தெரியாது என கருதி யாருக்கும் துரோகம் செய்யாதே. * மனசாட்சிக்கு மதிப்பளிப்பவன் ஒருபோதும் நிம்மதி இழப்பதில்லை. * கடவுளைச் சரணடைந்தால் பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபடுவாய். * பெற்றோருக்கு சேவை செய்யாவிட்டால் வழிபாடு பலன் அளிக்காது. * மற்றவரைக் குறை கூறித் திரிபவன் விலைமதிப்பற்ற காலத்தை வீணாக்குகிறான். * கடவுளை வெளியில் தேடுவது வீண்செயல். உனக்குள்ளே இருப்பதை உணர்வதே ஞானம். - சொல்கிறார் ராமகிருஷ்ணர்