Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க கவச அலங்காரத்தில் கோட்டை ... ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை கும்பாபிஷேகமே முடிஞ்சுருச்சு; சிறப்பு மலர் இன்னும் வரலை!
எழுத்தின் அளவு:
தஞ்சை கும்பாபிஷேகமே முடிஞ்சுருச்சு; சிறப்பு மலர் இன்னும் வரலை!

பதிவு செய்த நாள்

26 பிப்
2020
12:02

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்காக தயார் செய்யப்பட்ட, சிறப்பு மலர் புத்தகம் வெளியிடப்படாததால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம், 23 ஆண்டுகளுக்கு பின், 5ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் கோவிந்தராவ் சிறப்பு மலர் புத்தகம் வெளியிட, ஏற்பாடுகள் செய்தார்.இதற்கான பணிகள், சரஸ்வதி மஹால் நுாலகத்தில் நடந்தது. 250 பக்கங்கள் உடைய புத்தகத்திற்காக வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், கட்டுரையாளர், பேராசிரியர் என பலரிடம், 30 கட்டுரைகள் பெறப்பட்டன.ஆனால், கும்பாபிஷேகம் முடிந்து, மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், இதுவரை சிறப்பு மலர் வெளியிடப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது குறித்து, கட்டுரையாளர்கள் கூறியதாவது: பெரியகோவில் கும்பாபிஷேக மலர் வெளியிட, மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என, கூறப்படுகிறது. மேலும், புத்தகம் அச்சிடுவதில், போதிய நிதி இல்லாத நிலையில், பணிகள் நிற்பதாக கூறுகின்றனர்.சிறப்பு மலர் வெளியிட, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டலாபிஷேகம், 29ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அன்றை தினம், சிறப்பு மலர் புத்தகத்தை வெளியிட வேண்டுகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
வள்ளிமலை; வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகையையொட்டி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar