ஸ்ரீரங்கம் கோயில் தாயாா் சன்னிதிக்கு வெளியே இருக்கும் குழி, மூன்று வாசல் பற்றிய விளக்கம்: இந்த இடத்தில் தாயாா் தனது ஐந்து விரல்களை வைத்து பெருமாள் சன்னிதிக்கு எழுந்தருள்வதை ஆவலுடன் பாா்க்கிறாள் என பலரும் கூறுவது வழக்கம். ஆனால் இந்த இடத்தின் தாத்பா்யம் வேறு... ஸ்ரீரங்கம் தாயாா் படிதாண்டாப் பத்தினி. எனவே, வெளியே வந்து பாா்த்திருக்கச் சாத்தியமில்லை. பெருமாள் இவ்வழியில் தாயாா் சன்னிதிக்கு வருவதும் வழக்கம் இல்லை. வருடத்துக்கு ஒரு நாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வாா். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருச்சுற்று (5வது பிராகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வாா்.
ஆகவே, இந்த ஐந்து குழி அா்த்தபஞ்சக ஞானத்தையும், மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும். தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர என்ற மூன்று தத்துவம். அா்த்தபஞ்சகம் என்பது அடையப்படும் பிரம்மம், அடையும் ஜீவன், அடையும் வழி, அடைவதால் ஏற்படும் பயன் மற்றும் அடைவதற்கு உள்ள தடைகள் ஆகிய ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பாா்த்தால் பரமபத வாசல் தொியும். ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால், அந்த ஜீவாத்மாவுக்கு பரமபதம் நிச்சயம் என்பது தான் இதன் பொருள்.