Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதிய வைரஸ் உருவாகும்: முன்பே ... பழநி வின்ச் இன்று இயங்கும் பழநி வின்ச் இன்று இயங்கும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறியூர் மாரியம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சிறியூர் மாரியம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 மார்
2020
04:03

கோத்தகிரி: ஊட்டி சிறியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. ஊட்டி அருகே அமைந்துள்ள சிறியூர் மாரியம்மன் திருவிழா, ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், நீலகிரி உட்பட, சமவெளிப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

நடப்பாண்டு, கடந்த 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 10ம் தேதி கம்பம் நாட்டு விழாவும், 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி அம்மனை அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. 16ம் தேதி பூ குண்டத்திற்கு பக்தர்கள் மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ மாசி கரியபண்ட ஐய்யன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து 6 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 12:00 மணிக்கு, ஜாகரை தேர் (நவதானிய பூஜை) நடைபெற்றது. தொடர்ந்து, கூக்கல் திருவள்ளுவர் கலா மன்றத்தாரின், ஆரவல்லி சூரவல்லி என்னும் படுக மொழி நாடகம் இடம்பெற்றது. நேற்றுக்காலை, 9:00 மணிக்கு, பூகுண்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோத்தகிரி ஊட்டி கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறியோருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, கூக்கல் எட்டூர் மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar