Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அச்சன்கோவிலில் சித்திரை விஷு பூஜை ஊட்டி கோவில்களில் பக்தர்களின்றி நடந்த புத்தாண்டு பூஜை ஊட்டி கோவில்களில் பக்தர்களின்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் புத்தாண்டு பூஜை: வீடுகளில் முக்கனி வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் புத்தாண்டு பூஜை: வீடுகளில் முக்கனி வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
01:04

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் கோவிலில், ஒன்பது வகை அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரூபாய் நோட்டுகளால் அலங்கார மாலை அணிவிக்கப்பட்டது.

முக்கனிகள் படைக்கப்பட்டன. இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கோவில்கள் நடைசாத்தப்பட்டது. இதனால், கோவில்களில் காலை மற்றும் மாலை நேர பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றாலும், பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. ராஜஅலங்காரத்தில் முருகன் வள்ளி, தெய்வாணையோடு அருள்பாலித்தார்.வால்பாறை எஸ்டேட் பகுதியிலுள்ள அனைத்து கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. ஊரடங்கு உத்தரவால் கோவில்களில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.உடுமலைஉடுமலையில், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் மற்றும் மங்கல பொருட்கள் உள்ளடக்கிய தட்டை, வீட்டு பூஜையறையில், வைத்து தமிழ் புத்தாண்டை வழிபட்டனர்.வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டியிருந்தனர். கிராம கோவில்களில், சித்திரையை வரவேற்க வேப்பிலை தோரணம் கட்டினர்.ஊரடங்கு காரணமாக, புனித தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து நடத்தப்படும், சிறப்பு வழிபாடு ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாங்கம் படிப்பு: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை மூலவருக்கும், உலகில் நோய் பாதிப்புகள் நீங்கி, சுபிட்ஷம் பெறவும், தன்வந்திரி பெருமாளுக்கும் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு பொருட்கள் கொண்டு யாகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் தாயார்களுக்கும், தன்வந்திரி பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.தமிழ்ப்புத்தாண்டுக்கு சுவாமிக்கு, முக்கனிகள் படைத்து, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சார்வரி வருஷ பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. கோவில் பட்டாச்சார்யார்கள் மட்டும், சிறப்பு யாக பூஜைகளில் பங்கேற்றனர். - நிருபர் குழு -.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar