Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீதிக்குத் தலை வணங்கு கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேடினேன் வந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
03:04

அட்லாண்டிக் கடலில் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த பயணிகளின் நேரத்தை பயனுள்ளதாக்க விரும்பினார் கப்பலின் கேப்டன். அதற்காக பயணிகளில் ஒருவரான ஆன்மிகச் சொற்பொழிவாளர் பிரடெரிக் பிரதர்டன் மேயர் என்பவரின் உதவியை நாடினார். அவரும் சொற்பொழிவாற்ற சம்மதித்தார்.
இதையறிந்த சகபயணிகளில் ஒருவரான அரைகுறை நாத்திகவாதி, ‘‘ஆண்டவரின் எண்ணங்களை எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாது. அப்படியிருக்க இந்த சொற்பொழிவாளர் பேசுவதில் அர்த்தமில்லை?’’ என நண்பரிடம் வாதிட்டபடி அரைமனதுடன் சொற்பொழிவில் பங்கேற்க புறப்பட்டார். செல்லும் வழியில் ஒரு பெண் களைப்புடன் நாற்காலியில் வாய்திறந்தபடி துாங்கிக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் கைகள் விரிந்தநிலையில் இருந்தன. வேடிக்கை எண்ணத்துடன், அவளைக் கண்ட நாத்திக
தன்னிடம் இருந்த இரண்டு ஆரஞ்சுபழங்களை அவளது கைகளில் வைத்து விட்டுச் சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, ‘‘நண்பரே! ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத உங்களைப் போன்றவர்கள் சொற்பொழிவில் பங்கேற்பதில் அர்த்தமில்லையே!’’ என கேலி செய்தார் ஒரு நபர்.  
கோபம் தலைக்கேற, ‘‘உளறுவாயனான பிரடெரிக் என்ன பேசுகிறான் என்பதைக் கேட்பதற்காகத் தான் பங்கேற்றேன்’’ என பதிலளித்தார்.
சொற்பொழிவு முடிந்து இருவரும் வரும்போது, அந்த பெண் விழித்திருந்தாள். அவளது முகத்தில் ஏக மகிழ்ச்சி.
அதற்கான காரணத்தைக் கேட்டார் நாத்திகவாதி.
‘‘ஐயா! கடல் பயணம் என் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மிகவும் களைப்பாக உணர்ந்தேன். இந்நிலையில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே! நடுக்கடலில் பழத்துக்கு என்ன செய்வது?’’ என சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் குரல் ஆண்டவரின் காதுக்கு எட்டி விட்டதோ என்னவோ? தேடிய பொருள் உடனே கண்முன்னர் நின்றது’’ என்றாள்.
நாத்திகவாதியின் முகத்தில் ஈயாடவில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், இடகுஞ்சிபட்டணாவில், சித்தி விநாயகர் கோவில் ... மேலும்
 
மாண்டியா நகரின், சங்கர நகரில் உள்ள பலமுரி விநாயகர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவில் ... மேலும்
 

101 கணபதி ஆகஸ்ட் 26,2025

மைசூரு நகரின், கணபதி கோவில் சாலையில், அகராவில் 101 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மைசூரில் பழமையான ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டம், மூல்பாகல் தாலுகாவின் குருடுமலே என்ற கிராமத்தில் குருடுமலே கணபதி கோவில் ... மேலும்
 
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar