Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் ... சுகாதார பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த பூசாரி சுகாதார பணியாளர்களுக்கு பாத பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ரத்து
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ரத்து

பதிவு செய்த நாள்

23 ஏப்
2020
10:04

காரைக்கால்: காரைக்காலில் கொரோனா எதிரொலி திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ் கூறியுள்ளார்.

காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அருள்பாலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சனிபகவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள அய்யனார்.பிடாரி. சீதளாதேவி உள்ளிட்ட ஆலயங்களில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜீன் 5ம் தேதி முடிவடைகிறது. விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆலய சிவாச்சாரியார்கள்.பூசாரிகள். ஊழியர்கள் தேவஸ்தான ஐந்து கிராமத்தினர் மற்றும் இதர பகுதி கிராமத்தினர் ஆகியோர் பங்களிப்போடு நடைபெறும்.மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி சகோபுரம் வீதி உலா. செண்பக தியாகராஜ உன்மத்த நடனம். தேர் திருவிழா.சனிபகவான் வீதி உலா மற்றும் தெப்பம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிககாணப்பட்டு வரும் நிலையில் உலகத்தை அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பக்தர்கள் தரிசனம் விழா மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவிழா முக்கிய ஆரம்ப விழா கொடியேற்றம் நடத்த இயலாத காரணத்தால் மேற்படி கொடியேற்ற விழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விழாவின் கொடியேற்றத்தை தொடர்ந்து வரும் அனைத்து முக்கிய நிகழ்ச்சி விநாயகர்.சுப்பிரமணியர் உற்சவம் மற்றும் செண்பக தியாகராஜ உன்மத்த நடனம். தேர் திருவிழா. சனிபகவான் வீதியுலா.தெப்ப உற்சவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் ஆதாஷ் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar