Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்க மழை பொழிந்த தலம் யானை முடுக்கு; பூனை முடுக்கு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அள்ளித் தரும் அட்சய லிங்கேஸ்வரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
06:04

செல்வம் பெருக அட்சய திரிதியை நாளில் வழிபட வேண்டிய அட்சய லிங்கேஸ்வரர், திருவாரூர் மாவட்டம் கீவளுரில் கோயில் கொண்டிருக்கிறார்.
திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் முடிந்த பின், முருகன் படைவீரர்களுடன் இத்தலத்திற்கு வந்தார். சூரனைக் கொன்ற பாவம் தீர இங்கு சிவபூஜை செய்து விமோசனம் பெற்றார். கேடுகளை போக்கியருள்வதால் ‘கேடிலியப்பர்’  என்றும், வரங்களை அள்ளித் தருவதால்  ‘அட்சய லிங்கேஸ்வரர்’ என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது.
சிவபூஜை செய்த முருகனுக்கு அசுர சக்திகளால் இடையூறு நேராதபடி காவல் காத்த பார்வதி,  தனி சன்னதியில்  ‘அஞ்சுவட்டத்தம்மன்’ என்னும் பெயரில் அருள்கிறாள். சிவபூஜையைத் தொடங்கும் முன் முருகன் மஞ்சளில் விநாயகர் பிடித்து பிள்ளையார் பூஜை செய்தார். கீவளுரில் இருந்து சற்று துாரத்திலுள்ள மஞ்சாடி என்னும் ஊரில் இந்த விநாயகர் இருக்கிறார்.
 நடராஜர் இடது பாதம் ஊன்றி, வலது பாதத்தை துாக்கியபடி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்  இவரை சின்ன வெள்ளியம்பலம் என்று அழைக்கின்றனர்.
திருமால், பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், சந்திரன், வாயு, வசிஷ்டர், மார்க்கண்டேயன், துன்மதி, சந்திரகுப்தன் ஆகியோர் சிவனை வழிபட்டு செல்வ வளம் பெற்றனர்.  இலந்தை மரம் தல விருட்சமாக உள்ளது.  
பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், குபேரனுக்கு சன்னதிகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிரமோற்ஸவம் நடக்கிறது.
செல்வது எப்படி
திருவாரூர் –  நாகப்பட்டினம் செல்லும் வழியில் 15 கி.மீ.,
விசேஷ நாட்கள்:
அட்சய திரிதியை, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மகாசிவராத்திரி  
நேரம்
காலை 6:00 – பகல் 12:00 மணி, மாலை 5:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு
04366 – 276 733  
அருகிலுள்ள தலம்: திருவாரூர் தியாகராஜர் கோயில்   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar