பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!
பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், சுக்கிரனால் மாதம் முழுவதும் சந்தோஷ சாரல் அடிக்கும். செவ்வாய் ஆக. 12-ந் தேதி வரை 11-ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு முன்னேற்றத்தை கொடுப்பார். புதிய முயற்சியில் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். சூரியனால் பண வரவு இருக்கும். மேலும் புதன் ஆக. 13-ந் தேதி சாதகமான இடத்துக்கு மாறுகிறார். அப்போது நன்மை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். தேவையான வசதி, வாய்ப்பு கிடைக்கும். ஜூலை 30 க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். ஆக.12க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதுாகலமாக இருப்பர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் குறையின்றி பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் உண்டு. பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பொறுமையும், விட்டுக் கொடுக்கும் பண்பும் தேவைப்படும். ஆக.12 க்கு பிறகு சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் வருமானத்தைப் பெருக்குவர். சனி பகவானால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டு மறையும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்கவும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும். கண்வலி பூரண குணம் அடையும். செவ்வாயால் ஆக.12க்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். சிலருக்கு பணவிரயம் ஏற்படலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். எதிர்பாராத வகையில் கூடுதல் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.
* வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். ஜூலை30க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். விண்ணப்பித்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு ஜூலை30க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் வேலைப்பளு குறையும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உன்னத பலனை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த கோரிக்கைகளை ஆக.12க்குள் கேட்டு பெறலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன ஜூலை 23 க்கு பிறகு மறையும். சுக்கிரனால் அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஆக.12க்கு பிறகு சிறப்பான பலனைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* ஐ.டி., துறையினருக்கு சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு வேலைப்பளு குறையும். வேலையில் திருப்தி காண்பர். யாருடைய உதவியையும் நாடாமல் தொழிலில் சாதனை படைப்பர்.
* வக்கீல்களுக்கு ஆக.12 க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* பொதுநல சேவகர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பெண்களின் ஆதரவால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர்.
* விவசாயிகள் பழவகைகள், நெல், கேழ்வரகு, சோளம் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஆக.12க்குள் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
* கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெறலாம் ஆக. 12க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆக.12 க்கு பிறகு கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை 27 – ஆக. 12 வரை பகைவர் தொல்லை ஏற்படலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஈடுபடுவோர் சுதந்திரமற்ற நிலையில் இருப்பர்.
* ஆசிரியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
* அரசியல்வாதிகள் ஆக.12க்கு பிறகு விழிப்புடன் இருக்கவும். பலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
நல்ல நாள்: ஜூலை 16,17,18,21,22,27,28,29,30 ஆக.5,6,7,8,9,12,13,14
கவன நாள்: ஜூலை31,ஆக.1,2 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்:
* செவ்வாய் தோறும் துர்கை வழிபாடு
* புதன்கிழமை குலதெய்வத்திற்கு தீபம்
* பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வம்