பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
கடமையில் கண்ணாகத் திகழும் கன்னி ராசி அன்பர்களே!
ராசிக்கு 11ல் உள்ள சூரியன் பொருளாதார வளத்தை கொடுப்பார். புதன் ஜூலை 27ல் மிதுன ராசியில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 30 வரை நன்மை தருவார். நல்ல பணப்புழக்கம் இருக்கும். இந்த மாதம் கையில் இருப்பதை சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். மதிப்பு, மரியாதை உயரும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதிகள் கிடைக்கும். பெண்களின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். ஜூலை 24க்கு பிறகு பண வரவு கூடும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதரர்களின் வழியில் பணஉதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாயால் ஆக.12க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு புதனால் பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
* வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். விரிவாக்கத்திற்காக விண்ணப்பித்த வங்கிக்கடன் கிடைக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஜூலை 30க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
* மருத்துவர்கள் கூடுதல் சலுகையை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும்.
* வக்கீல்கள் நடத்தும் வழக்குகளில் முடிவு சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையை அடைவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு வீண் செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். நெல், பாசிப்பயறு, சோளம், காய்கறி, பழ
வகைகளில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பர். படிப்புடன் கலை, விளையாட்டு துறையிலும் சாதனை படைப்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆக.12க்கு பிறகு பகைவரால் தொல்லை வரலாம்.எனவே சற்று கவனமாக இருப்பது நல்லது.
* தரகு, கமிஷன் தொழிலில் சிலர் தரம் தாழ்ந்தவர் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்க நேரலாம். கவனம்.
* தனியார் துறை பணியாளர்கள் ஆக.12க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
* ஆசிரியர்கள் பணியிடத்தில் விழிப்புடன் செயல்படவும். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சற்று முயற்சி செய்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி ஆக.12 க்கு பிறகு மறையும்.
* அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்.
* வக்கீல்களுக்கு ஆக. 12க்கு பிறகு பணியில் கூடுதல் கவனம் தேவை.
* கலைஞர்களுக்கு ஜூலை 30க்கு பிறகு எதிரி தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் உருவாகலாம்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. ஆக.12க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
நல்ல நாள்: ஜூலை 19,20,21,22,25,26,29,30 ஆக. 5,6,7,8,9,15,16
கவன நாள்:ஆக.10,11 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்:
* வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் விரதம்
* ஞாயிறு மாலையில் பைரவருக்கு நெய் தீபம்