Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுசீந்திரத்தில் போலீஸ் ... மதுரையில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய சதிக்கல் மதுரையில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் ‘ஹீட் ரிப்ளக்டிவ்’வர்ணம் பூச்சு
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் கோவிலில் ‘ஹீட் ரிப்ளக்டிவ்’வர்ணம் பூச்சு

பதிவு செய்த நாள்

14 அக்
2020
11:10

 ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வெயில் காலத்தில் பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.பிரசித்தி பெற்ற, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை, விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இந்நிலையில், கோவில் வளாகத்தில், வெயில் காலத்தில் பக்தர்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. பக்தர்கள் நடந்து செல்ல, குறைந்த அளவில் தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. வெயிலால் சூடு படாத வகையில் நடப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கோவில் வளாகத்தில், பக்தர்கள் நடந்து செல்லும் பகுதிகளில், ஹீட் ரிப்ளக்டிவ் பெயின்ட் என்கிற, சூடு பரவாத பிரத்யேக வெள்ளை நிற வர்ணம் பூசியுள்ளனர்.பாதுகாப்பான முறையில், சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் நுழையும் பகுதியில், தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் நிறுவி, கை, கால் கழுவி செல்லவும், கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.அகலாத ஆக்கிரமிப்புகோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில், கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ரோடுகள் குறுகலாக மாறியதால், வாகனங்களில் செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, ஆனைமலை வருவாய்த்துறை, பேரூராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர். அலட்சியம் காட்டாமல், அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மற்ற கோவில்களில்...பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில், பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் தரைவிரிப்பு கூட விரிக்கப்படாமல் உள்ளது. இதனால், வெயில் காலத்தில், அனல் பறக்கும் தரையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல, ஹீட் ரிப்ளக்டிவ் பெயின்ட் பூசி, தரை விரிப்புகள் போடுவதற்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar