Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்களின் நன்கொடை பணத்தில் ராமர் ... நேபாளத்தில் பசுபதி நாத் கோவில் திறக்கப்பட்டது நேபாளத்தில் பசுபதி நாத் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செங்கோடு மரகதலிங்க வழிபாட்டில் பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
திருச்செங்கோடு மரகதலிங்க வழிபாட்டில் பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

17 டிச
2020
12:12

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் மார்கழி மாத அதிகாலை மரகதலிங்க தரிசனம் துவங்கிய நிலையில், முறையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்யாததால், நெரிசலில் சிக்கி பக்தர்கள் திணறினர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி உள்ளிட்ட மாதாந்திர விசேஷ நாட்களிலும், வைகாசி விசாக தேர் திருவிழா, புரட்டாசி மாத கேதார கவுரி விரதம், பார்வதி தேவி மற்றும் பிருங்கி முனிவர் வழிபாடு செய்த மார்கழி மாத மரகதலிங்க வழிபாடு ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான மரகதலிங்க வழிபாடு, நேற்று அதிகாலை துவங்கியது. ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, அறநிலையத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால், நெரிசலில் சிக்கி தவித்தனர். முக கவசம் அணிந்து வந்துள்ளனரா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனரா என்ற கண்காணிப்பு இல்லை. பக்தர்கள் வரிசையாக தரிசனத்திற்கு செல்ல தடுப்புகள் அமைக்கப்படவில்லை. பக்தர்களை முறைப்படுத்தி அனுப்பவும் ஆட்களில்லை. மேலும், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன், திருச்செங்கோடு கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பதால், முக்கிய விசேஷ நாட்களில் முடிவெடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar