Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: உதவிக்கரம் ... அனந்த பத்மநாப கோவிலில் 25ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு அனந்த பத்மநாப கோவிலில் 25ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருப்பணிக்கு கோர்ட் தடை; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
கோவில் திருப்பணிக்கு கோர்ட் தடை; பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

23 டிச
2020
04:12

பல்லடம்:கோவில் திருப்பணிக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்தது, பல்லடத்தில் பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், கோவில்களில் திருப்பணி செய்வதற்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. பல்லடத்தில், பழமையான கோவில்கள் கும்பாபிஷேகத்துக்காக காத்திருக்கும் நிலையில், ஐகோர்ட் உத்தரவு பக்தர்களிடையே கவலையை அளித்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:பல்லடத்தில் ஸ்ரீமாகாளியம்மன், பொங்காளியம்மன், ஸ்ரீபாலதண்டாயுதபாணி, அருளானந்த ஈஸ்வரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்கள், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ளன. ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.அறநிலையத்துறையின் மெத்தனம் காரணமாக பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாததால், பழமையான கோவில்கள் சிதிலமடைந்து, புராதன தன்மையை இழந்து வருகின்றன. நீண்ட காலத்துக்கு பின் கோவில்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டது.அதன்படி, முதல் கட்டமாக கடைவீதி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறக்கட்டளை குழுவும் அமைக்கப்பட்டன. பாலாலய கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள தடை விதித்தது.மாகாளியம்மன் கோவிலை தொடர்ந்து இதர கோவில்களிலும் திருப்பணி நடத்த தீர்மானித்திருந்தோம். ஐகோர்ட் உத்தரவால், திருப்பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறையினர், கோர்ட்டில் விளக்கம் அளித்து, கோவில் திருப்பணிக்கு அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக ... மேலும்
 
temple news
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar