Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தமிழனின் கலைத்திறனுக்கு சான்று 18ம் ... கச்சத்தீவு சர்ச் திருவிழா ரத்து கொரோனா அச்சம் எதிரொலி கச்சத்தீவு சர்ச் திருவிழா ரத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் மசூதி கட்டும் பணி ஜன.,26ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
அயோத்தியில் மசூதி கட்டும் பணி ஜன.,26ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
11:01

லக்னோ: உ.பி., அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் ஜன.,26ல் துவங்க இருப்பதாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அறிவித்துள்ளது.

பல வருடங்களாக நீடித்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கிற்கான தீர்ப்பினை கடந்த 2019ம் வருடம் உச்சநீதிமன்றம் வழங்கியது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளவும் அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்காக தனியாக 5 ஏக்கர் இடம் ஓதுக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வரும் ஜன., 26ம் தேதி காலை 8 30 மணியளவில் அயோத்தியில் உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் இந்திய தேசிய கொடியேற்றத்துடன் மசூதி கட்டும் பணி துவங்க உள்ளது. இது தொடர்பாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் 9 உறுப்பினர்கள் கடந்த ஞாயிறன்று கலந்து ஆலோசித்தனர். இந்திய வரித்துறையிலிருந்து முழு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மசூதி கட்டும் பணி துவங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடுதல் பற்றி இஸ்லாமிய அறக்கட்டளை தெரிவத்ததாவது, ‛ உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமேசான் காடுகள் மற்றும் ஆஸி காடுகளில் ஏற்பட்ட தீயை மறக்க முடியாது. இவை குறித்து மக்களிடம் விழப்புணர்வு ஏற்பட வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த மாதம் இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையானது புதிய மசூதிக்கான வரைபடத்தை வெளியிட்டது. மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நூலகம், சமுதாய கூடம், மியூசியம் போன்றவையும் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar