Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதயாத்திரை பக்தர்களுக்கு ... சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உலா சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்பெண்ணை நதியை பாதுகாக்க பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
தென்பெண்ணை நதியை பாதுகாக்க பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
02:01

தஞ்சாவூர், தென்பெண்ணை நதியை பாதுகாக்க வலியுறுத்தி, ஜன.30ம் தேதி, விழிப்புணர்வு பாத யாத்திரையை துவங்கி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அகல பாரதீய சன்னியாசிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமனந்தா சுவாமிகள் தலைமையில், தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம்  நடந்தது. கூட்டத்தில் அறக்கட்டளையின் செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, சன்னியாசிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் கோராக்ஷனந்தாசுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் ராமானந்தாசுவாமிகள் கூறியாதவது: தமிழ் கடவுள் முருகபெருமானுக்கு உகந்த தினமான தைப்பூச விழாவுக்கு அரசு விடுமுறையை அளித்த தமிழக அரசுக்கு முதலில் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம். மேலும், டெல்டா உள்ளிட்ட தமிழகத்தில் தொடர் மழையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் விழாவை சரிவர கொண்டாடமுடியவில்லை. எனவே வரும் தைப்பூசத்தன்று விவசாயிகள் அவரவர் இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க தமிழகத்தில் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கையிலாய யாத்திரை செல்பவர்களுக்கு நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும். கும்பகோணத்தில் வரும் பிப்.26-ம் தேதி மாசிமக விழாவும், ஆரத்தி பெருவிழாவும் வழக்கம் போல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. நதிகளை பாதுகாக்க வேண்டியும், நீர்நிலைகளை போற்றி வணங்க வேண்டியும், ஏற்கெனவே அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி நதி பாதுகாப்பு யாத்திரை, தாமிரபரணி, வைகை நதிகளில் விழிப்புணர்வு யாத்திரைகளும், புஷ்கரங்களும் நடத்தப்பட்டு இன்றளவும் அந்த நதிகளில் நீர் குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது. அதே போல் தென்பெண்ணை நதிக்காக விழிப்புணர்வு பாத யாத்திரை முதற்கட்டமாகவும், அதனைத் தொடர்ந்து புஷ்கர விழாவும் நடத்தப்படவிருக்கிறது. இதில் வரும் 30-ம் தேதி கர்நாடக மாநிலம் நந்திமலையில் இருந்து தென்பெண்ணை நதி பாதுகாப்பு பாதயாத்திரை தொடங்கவுள்ளது. பிப். 24-ம் தேதி பாதயாத்திரை கடலுார் மாவட்டத்தில் முடிவடைகிறது. யாத்திரைக்கு பின்னர் புஷ்கர விழா நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar