Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிக்கல் கோவிலில் துர்கா தரிசனம் காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் குளத்தில் நீர் பீய்ச்சி அடிப்பு!
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் குளத்தில் நீர் பீய்ச்சி அடிப்பு!

பதிவு செய்த நாள்

17 மார்
2021
04:03

மேட்டுப்பாளையம்: மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகம், தெப்பக்குளத்தில், தண்ணீரை பீச்சி அடித்து வருகிறது.

காரமடை தோலம்பாளையம் சாலையில் உள்ள தெப்பக்குளம், அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது. இக்குளத்தைக் கருட தீர்த்தமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில் குப்பையை போட்டு, தண்ணீரை மாசுபடுத்தாமல் இருக்க, குளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்து நீர், ஓடுகிற நீராக இல்லாமல், பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கிறது. இதனால், பாசி பிடித்து, பச்சை நிறத்தில் உள்ளது. இந்நிலையில், குளத்தில் மின்மோட்டார் வாயிலாக, தண்ணீரை பீச்சி அடிக்கும் பணியை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது:அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில், தண்ணீர் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதால், நீரின் அடர்த்தி கூடியுள்ளது. இதனால், மீன்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில், சிரமம் ஏற்படும். எனவே, தெப்பக்குளத்தில் மின் மோட்டார்கள் அமைத்து, அதன் வாயிலாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. நீர் உயரமான இடத்தில் இருந்து விழுவதால், அதன் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படுவதோடு, மீன்களுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar