Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராயபுரம் சர்ச் தேர்த் திருவிழா அனுமதியின்றி கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முயல் வேட்டை திருவிழா பக்தர்கள் வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
06:04

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, முயல் வேட்டை எனும் வினோத வழிபாடு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி, பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் கிராமத்தில் முயல் வேட்டை திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. திருவிழாவையொட்டி குறைந்தது வீட்டுக்கு ஒருவர் வீதம் முயல் வேட்டைக்கு செல்வதற்காக கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன் நேற்று காலை 7 மணி அளவில் ஆண்கள் மட்டும் கூடினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது கோவில் பூசாரி சாமியாடி வேட்டைக்கு செல்லும் திசை மற்றும் வேட்டையின் போது கிடைக்கும் முயல்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து குறி சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுவர்கள், பெரியவர்கள், வாலிபர்கள் என 50க்கும் மேற்பட்டோர் குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல் வேட்டைக்கு கிளம்பினர்.

மாலை 6 மணி வரை முயல் வேட்டையில் ஈடுபட்டு வேட்டையாடிய முயல்களுடன் குறிப்பிட்ட பகுதியில் மாலையில் கூடினர். வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து புத்தாடை அணிந்து வேட்டையாடிய முயல்களை இரவு 7:30 மணி அளவில் குச்சிகளில் தோரணம் போல் தொங்கவிட்டு மேல தாளங்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடு ஆகியவை சாமிக்கு பலி கொடுக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. முயல் மற்றும் ஆடு கறி பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலும் சாமிக்கு படையல் இட்டு பூஜை செய்து துறைமங்கலம் கிராம பொதுமக்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar