Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிழாக்களுக்காக காத்திருக்கும் ... ஸ்ரீராமநவமி விழா: கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு ஸ்ரீராமநவமி விழா: கோவை கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் பாணியில் அமையும் பிராணநாதர் ஆலயம்
எழுத்தின் அளவு:
சோழர் பாணியில் அமையும் பிராணநாதர் ஆலயம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
03:04

பெ.நா.பாளையம : பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில், மங்களாம்பிகை உடனமர் பிராணநாதர் ஆலய கட்டுமான பணி நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம், திருமங்கலக்குடியில், மங்களாம்பிகை உடனமர் பிராணநாதர் கோவில் உள்ளது. அக்காலத்தில் சோழ மன்னனிடம் பணியாற்றி வந்த தளபதி ஒருவர், படைகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக மன்னன் கொடுத்த பணத்தை, கோவிலை கட்டுவதற்கு செலவழித்தார்.இதை அறிந்த மன்னன், தளபதியின் மீது குற்றம்சாட்டி, சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். அப்போது, அந்த தளபதி, தனது உடலை, கோவில் அமைந்துள்ள வழியில் எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்தாராம்.

அந்த கோவில் வழியாக, தளபதியின் உடலை எடுத்துச் செல்லும்போது, தளபதியின் மனைவி, உன்னுடைய கோவிலை கட்டுவதற்காகத்தான் என் கணவர் இச்செயலில் ஈடுபட்டார். ஆனால், அவரது உயிர் போய் விட்டதே, மீண்டும் உயிர்பிக்க மாட்டாயா என, கண்ணீர் சிந்தி உள்ளார். அப்போது, சிவன் அம்பிகையுடன் எழுந்தருளி, தளபதிக்கு உயிர் கொடுத்தார் என்பது ஐதீகம். இதனால், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவன், பிராணநாதர் என்று அழைக்கப் படுகின்றார். பெரியநாயக்கன்பாளையம் அடுத்த, செல்வபுரத்தில், மங்களாம்பிகை உடனமர் பிராணநாதர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.

சோழர் கால சிற்பக் கலையைப் பின்பற்றி, ஆகம விதிகளுடன், கட்டப்பட்டு வரும், இக்கோவில் வளாகத்திலேயே, முருகன், விநாயகர், கால பைரவர், சண்டிகேஸ்வரர், மங்களாம்பிகை, நந்தியம்பெருமான் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டு வருகின்றன.தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய தெய்வங்களும் நிர்மாணிக்கப் பட உள்ளன. கோவில் கோபுரங்களில், பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன. நவ கிரக தோஷ, பரிகார ஸ்தலமாக பெரும் பொருட்செலவில், இக்கோவில் உருவாகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான  நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar