பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
10:06
அறிந்தோ, அறியாமலோ முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களே இப்பிறவியில் ஏற்படும் துன்பங்களுக்கு காரணம். நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. கடன், நிம்மதியின்மை, தம்பதி இடையே ஒற்றுமைக் குறைவு, நோய், குழந்தைகளால் கவலை, சகவாச தோஷம் என பலவிதமான துன்பங்கள் வாழ்வில் உண்டு. இதற்கான சக்திவாய்ந்த பரிகாரங்களை வேதகால மகரிஷிகள் வழங்கியுள்ளனர். இதில் முதன்மையானது கோயில்களில் தினமும் (அ) குறிப்பிட்ட கிழமையன்று நெய் தீபம் ஏற்றுவதாகும். வசதி இல்லாதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம் இதனால் சுபிட்சமான வாழ்வு அமையும்.
* ஞாயிறு – இதயம், வயிறு, ரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணம், தெய்வ நிந்தனை, பெரியோரை புறக்கணித்தல், முன்னோர் வழிபாட்டை மறந்ததால் ஏற்படும் துன்பங்கள்.
* திங்கள் – மனக்கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு மனவளர்ச்சி இன்மை, சோரியாசிஸ், என்ஸிமா, வெண்புள்ளிகள் போன்ற தோல் நோய்கள்.
* செவ்வாய் – பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், செவ்வாய் தோஷம், முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, கேதுவால் ஏற்படும் தோஷங்கள்.
* புதன் – படிப்பில் தடை, ஞாபக மறதி, பாடங்களில் ஆர்வமின்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், மருந்துகளுக்கு பிடிபடாத நோய்கள்.
* வியாழன் – ஆண்களுக்கு திருமணம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம் (ஆண் குழந்தை), தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குருவுக்கு துரோகம் செய்தல், பெரியோர்களை அவமதித்தல், குழந்தைகளால் பிரச்னை.
* வெள்ளி – தாம்பத்திய சுகக் குறைவு, தம்பதி இடையே ஒற்றுமையின்மை, கடன் தொல்லை, மாங்கல்ய பலம் இன்மை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனை
* சனி – ஆயுள், ஆரோக்கியம், விபரீத நோய்கள், தொழில், பிரச்னை, ராகுவினால் ஏற்படும் பில்லி, சூனியம், செய்வினை தோஷம், வேலையில் நிரந்தரமின்மை, ராகுவால் ஏற்படும் தோஷம்.
* ராகுவால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவால் ஏற்படும் தோஷங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.