Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி ... ஞானத்தின் ஊற்று! _ பக்ரீத் ஸ்பெஷல் ஞானத்தின் ஊற்று! _ பக்ரீத் ஸ்பெஷல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பம்சம்
எழுத்தின் அளவு:
ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பம்சம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2021
12:07

 இஸ்லாத்தின் ஐந்தாவது துாணாக இருப்பது ஹஜ் பெருநாள். அரேபியாவில் மெக்கா நகரிலுள்ள காபாவிற்கு செல்லும் பயணத்திற்கு ஹஜ் என்று பெயர். வசதி உள்ளவர்களின் மீது ஜகாத் கடமையாக்கப்பட்டது போல, காபாவுக்கு பயணம் செய்ய பணவசதியும், உடல் நலமும் உள்ளவர்களுக்கு ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.

புண்ணிய பயணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மூன்று. அதில் முதலிடம் பெறுவது காபா. மற்றவை மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந்நபவி, பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தீஸ். முஸ்லிம்கள் காபா இருக்கும் திசை நோக்கி தொழுகை செய்வர். காபாவின் சுற்றுவட்டாரத்தில் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. அங்கு தஞ்சம் புகுந்தவர்களையும் துன்புறுத்தக் கூடாது.

இறைவனால் போர் ஹராமாக்கப்பட்ட மாதங்களில், ஹஜ் கடமையை நிறைவேற்ற நிர்ணயம் செய்யப்பட்ட மாதங்களில் துல்ஹஜ் மாதமும் அடங்கும். ஏக இறைக் கோட்பாட்டின் தலைநகரம் என்பதை எடுத்துக்காட்ட முதன் முதலில் கட்டப்பட்ட இறை இல்லம் காபா. முகம்மது நபி காலத்திற்கு முன்பே அரேபியர்கள் ஹஜ் செய்து வந்தனர்.

தங்களின் முப்பாட்டனார்களாகிய இப்ராஹிம், இஸ்மாயில் பாரம்பரிய செயல்களை நிலைபெறச் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்து வருகின்றனர்.தன் நேசத்துக்குரிய புதல்வர் இஸ்மாயிலை பலியிடுவதற்கு தயாரான இப்ராஹிம் நபி வரலாறு அனைவருக்கும் தெரியும். அதற்கு சான்றாக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் அன்று உள்ஹியத் பலியிடுகின்றனர். நாம் நேசிக்கும் எதையும் இறைவனுக்காக பலியிடத் தயார் என்பதை தெளிவுபடுத்துவது இதன் நோக்கம்.

முஸ்லிம்களின் சமத்துவ சித்தாந்தத்தை பிரகடனம் செய்கிறது ஹஜ். எல்லா நற்குணங்களையும் தங்களுக்குள் வளர ஊக்குவிக்கிறது. பல்வேறு இனம், நிறம், மொழி, பண்பாடு கொண்ட மக்கள் ஒரே விதமான ஆடை அணிந்து, ஒரே செயல்களைச் செய்கின்றனர். எளிய வெள்ளை ஆடைகளை உடுத்தி மேற்போர்வை மட்டும் அணிந்திருப்பர். இந்த பிரத்யேக ஆடைக்கு இஹ்ராம் என்று பெயர். இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை இது காட்டுகிறது.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவை முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கும் கூட்டமைப்பு உணர்வை பலப்படுத்துகின்றன. ஹஜ் செய்பவர்கள் புதிதாக பிறந்த குழந்தைகளை போன்றவர்கள் என்கிறார் நாயகம். பிறந்த குழந்தை எந்த பாவமும் செய்யாதிருக்காதல்லவா? உண்மையை உணர்ந்த பின் தீமையைச் செய்ய இயலாது என்பது தான் இதன் பொருள். ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டும் பரிகாரம் தேடுகின்றனர்.ஆனா மூனா சுல்தான்,பாரம்பரிய வரலாற்று ஆர்வலர்,கீழக்கரை, ராமநாதபுரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar