Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவிலில் குரங்குகள் ... ராமேஸ்வரம் கோவிலில் திருவாச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார் சிலையை அகற்ற உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:07

திருபுவனை-திருவாண்டார்கோயில் சுதானா நகரில், பொது இடத்தில் உள்ள பிள்ளையார் சிலையை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி திருவாண்டார்கோயில் சுதானா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு மனைகள் பிரிக்கப்பட்டபோது, மக்கள் பயன்பெறும் வகையில் பொது இடம் ஒதுக்கப் பட்டது. அந்த இடத்தில் பிள்ளையார் சிலை நிறுவி, வழிபட்டு வருகின்றனர்.இந்தநிலையில், வேறொரு சமூகத்தினர் கொடுத்த புகாரின்பேரில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, அங்குள்ள வினாயகர் சிலையை அகற்ற, துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சிலையை அகற்றுவது தொடர்பாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், வில்லியனுார் தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இதை அறிந்த சுதானா நகர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர், நேற்று பகல் 12.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விநாயகர் சிலையை அகற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மறியலால், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்களுக்கும்-போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar