Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்கள் மூடல்: தரிசனத்துக்கு வந்த ... வடபழனி ஆண்டவர் கோவிலில் வாசலில் பக்தர்கள் தரிசனம் வடபழனி ஆண்டவர் கோவிலில் வாசலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை அடிவாரத்தில் வணங்கி சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மருதமலை அடிவாரத்தில் வணங்கி சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
09:08

 வடவள்ளி: மருதமலை மற்றும் பேரூர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று ஆடிக்கிருத்திகை, நாளை ஆடிப்பெருக்கு, வரும், 8ம் தேதி ஆடி அம்மாவாசை ஆகிய விசேஷ நாட்கள் வருகிறது. இதனால், கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நேற்று முதல் நாளை (3ம் தேதி) வரையும், வரும், 8ம் தேதியும், இந்த நான்கு கோவில்களில், பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தனர். அப்போது, அடிவாரத்தில் உள்ள மலைக்கு செல்லும் பாதையின் கேட் அடைக்கப்பட்டு, தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்த, பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பக்தர்கள் அடிவாரத்திலுள்ள படிக்கட்டு பாதை கேட் முன்பு, விளக்கு ஏற்றி வழிபட்டு சென்றனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப் படாததால், கோவில் முன் மற்றும் படித்துறை விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar