Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குவளைவேலி சூட்டுக்கோல் இராமலிங்க ... புதுச்சேரியில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் புதுச்சேரியில் விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கட்டிய பாலம்: தேவாரத்தில் ஆதாரம்
எழுத்தின் அளவு:
ராமர் கட்டிய பாலம்: தேவாரத்தில் ஆதாரம்

பதிவு செய்த நாள்

15 செப்
2021
10:09

 மதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது. ஆனால் தேவாரத்தில் அதற்கான ஆதாரம் தெள்ளத்தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன்.

அவர் கூறியது: ராமாயணம், மகாபாரதம் போன்றவை கட்டுக்கதைகள், ராமாயணத்தை மேலோட்டமாகத்தான் திருமுறைகள் எடுத்து கூறுகிறதே அன்றி ராமர் பாலம் கட்டியது பற்றியோ, ராவணனை பழித்து பேசியது பற்றியோ எந்த ஒரு திருப்பதிகங்களும் பாடவில்லை என ஒரு கருத்தை தொடர்ந்து பேசி வருகின்றனர்.ஆனால் சிவபெருமானின் சிறப்பை சொல்லும் விதத்தில் திருநாவுக்கரசர் தேவாரத்தில் எழுதியுள்ள பாடல் அழுத்தம் திருத்தமாக ராமாயண, சேது பாலம் கதைகளை விளக்குகிறது.

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்சேதுபந் தனஞ்செய்துசென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால்வென்ற போரரக்கன்நெடுமுடிகள் பொடியாய்வீழ அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றியடர்த்தவற்கே அருள்புரிந்தஅடிக ளிந்நாள் வங்கமலிகடல்புடைசூழ் மாட வீதிவலம்புரமே புக்கங்கேமன்னி னாரே

பொருள்: திருமால் வில்லை ஏந்திக் வானரசேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கையைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்ரீவன், வீடணன் முதலியோர் உதவியால் ராவணனுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான்.

இப்பாடலில் திருநாவுக்கரசர் குறிப்பிடும் ராமாயண நிகழ்வுகள்: ராமனை திருமால் என்று அழைக்கிறார். அதோடு வானர சேனையின் உதவியுடன் ராமர் பாலம் கட்டிய தகவலை கூறுகிறார். பின்னர் பாலத்தின் வழியாக இலங்கையை அடைந்து ராவணனை வெற்றி கொண்டதையும் குறிப்பிட்டுவிட்டு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, ராவணனின் கிரீடங்கள் பொடிப்பொடியாய் சிதறவிட்டு, அவனை வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவர் சிவபெருமான் என்கிறார். சிவபெருமானின் சிறப்பை கூறும் இந்த பாடல் ராமாயண நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது.திருநாவுக்கரசரின் காலம் இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பானது. எனவே ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் ராமாயணம் மக்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு பாடலே உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar