Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்து நாட்களும் அனுமதி: ... வன்னிய பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு வன்னிய பெருமாள் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் அடைப்பு பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் அடைப்பு பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

02 அக்
2021
04:10

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் அடைக்கப்பட்டதை அடுத்து, புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை முன்னிட்டு, கோயிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு புரட்டாசி மாதத்தில் உள்ள, 5 சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக, 1, 3, 5 ஆகிய வாரங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்வர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு, அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் அடைத்து இருந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயிலின் நுழைவாயில் கேட் அருகே நின்று, சுவாமியை வழிபட்டனர். கோவில் முன்பு சாலையில் அமர்ந்திருந்த தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை படையலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் தாசர்களிடமிருந்து, காய்கறிகளை சிறிதளவு பெற்று சென்றனர். கோவிலில் அரங்கநாதப் பெருமாளை நேரடியாக பார்த்து, வழிபட முடியாததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை ஆகிய பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து அரங்கநாத பெருமாள் மட்டும், கோவில் வளாகத்தின் உள்ளே வலம் வந்து, ஆஸ்தானத்தை அடைந்தார். இப்பூஜைகளில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar