Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரூர் படித்துறையில் ... புரட்டாசி அமாவாசை சதுரகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் கோவில்கள் முன்பு பக்தர்கள் குவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2021
05:10


மேட்டுப்பாளையம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற கோவில்கள் அடைக்கப்பட்டதால், பக்தர்கள் நுழைவாயில் கேட்டு முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் கோவில் உள்ளே செல்ல முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு மிகவும் பிரசித்தி பெற்ற, கோவில்களை அமாவாசை அன்று அடைக்கும்படி அறிவித்திருந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் தாலுகாவில் பிரசித்தி பெற்ற கோவில்களான, வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகிய கோவில்கள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் காரமடை அரங்கநாதர் கோவிலும், வனபத்ரகாளியம்மன் கோவிலும் அடைக்கப்பட்டு இருந்ததால், நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோயில் நுழைவாயில் கேட்டு முன்பாக, சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். கோவிலின் உள்ளே செல்ல முடியாத வகையில், நுழைவாயில் கேட் பூட்டப்பட்டிருந்ததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும், டாஸ்மாக் கடைகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை, சமூக இடைவெளி விட்டு திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது. முக்கியமான அமாவாசை மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களை அடைக்கும்படி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில், சுவாமியை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகளையும், தியேட்டர்களையும் திறக்க, அனுமதி வழங்கிய தமிழக அரசு, கோவில்களை திறக்க அனுமதி மறுத்துள்ளது, வேதனையை அளிக்கிறது. எனவே, சமூக இடைவெளியை, பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என, தமிழக அரசு, எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar