பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
10:06
திண்டுக்கல்:ஒக்கலிகர் (காப்பு)படவனவார் குலம்,வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.ஒக்கலிகர் சங்க மாநில கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமை வகிக்கிறார். நான்காம் கால பூஜையுடன் விழா துவங்குகிறது. 8.45க்கு தீர்த்தம் அழைத்து வரப்படுகிறது. 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. திண்டுக்கல் டவுன், செம்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் விசுவநாதன், ஆனந்தன், முன்னாள் அமைச்சர் பெரியசாமி,எம்.பி., க்கள் ஞானதேசிகன்,சித்தன்,தம்பிதுரை, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவரும்,முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், அறங்காவலர்கள் இளங்கோவன்,சவடமுத்து,சவடப்பன், சங்க தலைவர் காளியாயி(எ) ராமசாமி,ஆசிரியர் சுந்தரபாண்டியன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.