Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திண்டுக்கல் சிவன் கோயில்களில் ... உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 அக்
2021
01:10

துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோயிலில் சிவபெருமானுக்கு ஐப்பசி அன்னாபிஷேகவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.  நேற்று காலை விநாயகர் பூஜை, ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் கலச பூஜை, யாகம் நடந்தது. காலை 11மணிக்கு அன்னாபிஷேகம் செய்யும் சாதங்களுக்கு பஞ்சபிரம்ம மந்திரங்களால் பூஜை செய்யப்பட்டு அன்னாபிஷேக பாத்திரம் ஆலயம் வலம் வந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரம் துவங்கியது. தலைமைஅர்ச்சகர் செல்வம் பட்டர் அலங்காரங்களை செய்தார்.


பின்னர் அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் அலங்கார தீபாராதனை சாய் ரட்சனையுடன் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைஅர்ச்சகர் செல்வம் பட்டர், பௌர்ணமி பூஜை கமிட்டி வைரவநாதன், ராதா, நெல்லையப்பன், மாரியப்பன் குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். மளவராயநத்தம், தென்னகர் சிவன் கோயிலில் இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாரமங்கலத்தில் சந்திரசேகரி அம்பிகை சமேத சந்திரசேகரசுவாமி சிவன் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவில், சிவனடியார் மந்திரமூர்த்தி, மூக்கன் சித்தர், சிர்கோனியம் மேலாளர் பலவேசம், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்கமிட்டி முத்துக்குமார் தலைமையில் நிர்வாகத்தினர், செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar