பதிவு செய்த நாள்
30
நவ
2021
11:11
செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு 28 ம் தேதி காலை 8.30 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாகனம், கோபூஜை நடந்தது. மாலை 3.30 மீனாட்சி உடனுறை சொக்கநாதர் ஆலயத்தில் இருந்து திருவாபரண பெட்டி ஐயப்ப பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 5.30 மணிக்கு முதல் கால பூஜையும், தேவ பாராயணம், திருமுறை பாராயணம், அஷ்டபந்தனம் சாற்றுதல், கும்ப பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, அக்னி கர்யம், மகா பூர்ணாஹுதியும், தொடர்ந்து 9.45 மணிக்கு செத்தவரை ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு மூலவர் ஐயப்பனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஆரணி சண்முக குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக ஹோமங்கள் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.