கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக நெல்லை பரப்பி 1008 சங்குகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் சங்குகளுக்கும், கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் திருவீதி புறப்பாடு நடந்தது.