Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-6 நளதமயந்தி பகுதி-8 நளதமயந்தி பகுதி-8
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-7
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜன
2011
03:01

நாராயணா! என்ற மந்திரத்தை முழக்கியபடியே சென்ற நாரதரை இந்திரன் வரவேற்றான்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணையும் குளிரச் செய்யும் வகையில் மகதி என்னும் யாழ் மீட்டி இனிமையாய் பாடும் மாமுனிவரே, வர வேண்டும், வர வேண்டும், ஆசனத்தில் அமருங்கள். எல்லா லோகங்களுக்கும் சென்று வருபவர் நீங்கள். ஏதேனும்விசேஷத்தகவல் உண்டா? என்றான்.நாரதர் சிரித்தார்.நினைத் ததைத் தரும் கற்பகமரம், கேட்டதைத் தரும் சிந்தாமணி ஆகியவற்றையெல்லாம் கொண்ட பெரும் செல்வனே! தேவாதி தேவனே! வஜ்ராயுதம் ஏந்தி தேவர்களுக்கு துன்பம் தந்த பறக்கும் மலைகளில் சிறகுகளை வெட்டி வீசிய வீரத்திருமகனே! விசேஷம் இல்லாமல் இங்கே வருவேனா! என்றதும், என்ன சங்கதி? என்று ஆவலுடன் கேட்டான் இந்திரன். இந்திரா! வழக்கமாக உன்னைக் காண பலதேசத்து மன்னர்களும் வருவார்களே! இன்று யாரையும் காணவில்லையே, கவனித்தாயா? என்றார்.இதுபற்றி இந்திரன் ஏற்கனவே குழம்பிப்போயிருந்தான்.ஆம்! நாரத முனிவரே! இதற்கான காரணம் என்ன என்று தெரிந்தால் என் குழப்பம் தீரும். என்றான். (அக்காலத்தில், பூலோக மன்னர்கள் இந்திரனைக் காண அடிக்கடி வருவார்கள் என்ற தகவல் நளவெண்பாவில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)விதர்ப்பநாட்டு இளவரசி தமயந்திக்கு சுயம்வரம் நடக்கப்போகிறது. பூலோக மன்னர்களெல்லாம் அங்கு போய் குவிந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னைக் காண யாரும் இங்கு வரவில்லை, என்றதும், அந்தளவுக்கு அவள் பேரழகியா அல்லது இந்திரலோகத்தைப் போல் பெரும் செல்வம் படைத்தவளா? என்று கேட்டான். இந்திரா! தமயந்தி, உன் லோகத்தில் இருக்கும் ரம்பை, ஊர்வசி, திலோத்துமா ஆகியோரின் அழகையெல்லாம் ஒன்று சேர்த்தது போல கடைந்தெடுத்த வடிவம். வண்டுகள் மொய்க்கும் இயற்கை நறுமணத்தைக் கொண்ட கூந்தலை உடையவள். இளமையான யானைப்படையை உடைய வீமனின் மகள். அவன் குலம் தழைக்க வந்த அணையாவிளக்கு. மன்மதனே அவளது விழியழகை நினைத்துக் கொண்டு தான் காதல் பாணத்தையே மக்கள் மீது தொடுப்பான், என்றார் நாரதர்.

அவரது சொற்கள் இந்திரனின் மனதில் ஆசை அலைகளை எழுப்பின. அந்த தமயந்தி இந்திரலோகத்து ராணியானால் எப்படியிருக்கும்? இங்கே ஏற்கனவே பேரழகி இந்திராணி இருக்கிறாள். அவளையும் மிஞ்சும் வகையில் இன்னொரு ராணி வந்தால்... அவன் கற்பனைச் சிறகை விரித்தான். அது மட்டுமல்ல! இந்திரனின் அவையில் வீற்றிருந்த அக்னி, வருணன், எமதர்மராஜன் ஆகியோருக்கும் தமயந்தியின் மீது ஆசை ஏற்பட்டது. அனைவருமாக சேர்ந்து விதர்ப்ப தேசத்திற்குசெல்ல முடிவாயிற்று. அப்போது, அவர்களது ஞானதிருஷ்டியில், நிடதநாட்டு அரசன் நளனை தமயந்தி விரும்புகிறாள் என்பது பட்டது. அதற்கேற்றாற் போல், நளன் சுயம்வர மண்டபத்தை நோக்கி, வேகமாக தன் தேரில் மற்றவர்களை முந்திச்செல்லும் வகையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டனர். அவனைத் தடுத்து நிறுத்தி, தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்று கண்ணிமைக்கும் நேரத்தில் விதர்ப்பநாடு வந்து நளனைத் தடுத்தனர்.தன் முன்னால் வந்து நிற்கும் தேவேந்திரனைக் கண்ட நளன் அவனை வணங்கினான்.தேவேந்திரரே! என்னை ஏன் தடுக்கிறீர்கள்? நான் தமயந்தி சுயம்வரத்தில் கலந்து கொõள்ள வேகமாகச் சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.நளனே! நான் இப்போது உனக்கு ஒரு கட்டளையிடப் போகிறேன். அதை நீ முடித்துத் தர வேண்டும், என்றான்.யார் எந்தப் பணியைத் தந்தாலும் இல்லை என்று சொல்லாமல், அதை முடித்து தரும் இயற்கையான குணமுடைய நளன், இந்திரன் தன் ஆசைக்கே தடை விதிக்கப்போகிறான் என்பதை சற்றும் யோசிக்காமல், சொல்லுங்கள் தேவேந்திரா! தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் தயார்< என்று வாக்களித்து விட்டான். மதம் படைத்த யானைப்படையை உடைய மாபெரும் மன்னனே! நாங்கள் தேன்சிந்தும் மலர் சூடிய தமயந்தியைப் பெண் பார்க்க வந்துள்ளோம்.

எங்கள் நால்வரில் யாரேனும் ஒருவரது தகுதி, திறமையறிந்து யாரை அவளுக்குப் பிடித்துள்ளதோ, அவர்களுக்கே அவள் மாலை சூட்ட வேண்டும் என சொல்லி வர வேண்டும், என்று கிடுக்கிப் பிடி போட்டான் இந்திரன்.நளன் அதிர்ந்துவிட்டான்.யாராவது நம்மிடம் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டால், அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடக்கூடாது. அவரது கோரிக்கையை வற்புறுத்திக் கேட்டு, நம்மால் செய்ய முடியுமானால் தான் வாக்கு கொடுக்க வேண்டும். நளசரித்திரம் படிக்கும் நமக்கு இது ஒரு பாடம்.ஆனாலும் என்ன செய்வது? கொடுத்த வாக்கை மீற முடியுமா? தன் மனதில் இருக்கும் மங்கைநல்லாளின் மீதான ஆசையை தூக்கி எறிந்து விட வேண்டியது தான்! ஒருநாளாவது தமயந்தியுடன் வாழ்ந்தால் அந்த நாள் தன் வாழ்வின் பொன்னாள் என்று நினைத்திருந்த நளனுக்கு, தன் காதல் கானல் நீராகிப் போனது கண்டு வருந்தினான். சரியென தலையாட்டி விட்டான். தமயந்தியை நளன் காதலிப்பது தேவர்களுக்கு தெரியும். தமயந்தியும் அதே நிலையில் இருப்பதையும் அறிவார்கள். மற்றவர்களை தூது அனுப்பினால் தமயந்தி மறுத்து விடுவாள். காதலனையே தூது விட்டால் அவளால் என்ன செய்ய முடியும்? இப்படிப் போனது தேவர்களின் கணக்கு.நளனுக்கும் தன் காதலை தேவர்களிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. ஏனெனில், கொடுத்த வாக்கை மீற அவனால் முடியவில்லை. அதேநேரம் தமயந்தியிடம் தூது சென்று, இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னால், அவளது கண்ணாடி இதயம் நொறுங் கிப் போகுமே!நெஞ்சில் ஆசைக்கனலை மூட்டிய வேகத் தில், அதில் ஏமாற்றம் என்னும் தண்ணீரை ஊற்றி அணைக் கும் பித்தலாட்டக் காரனே என தன்னைத் திட்டவும் செய்வாளே... அவன் யோசித்தான்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar