Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆதிகேசவ பெருமாள் கோயில் பரிகார ... விவேகானந்தரின் நினைவு நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2012
11:07

கழுகுமலை : கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் கோலாகலமாக நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தி ன் சிறந்த சுற்றுலாத்தலமான கழுகுமலை நகருக்கு பெரு மை சேர்ப்பதில் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் பெரும்பங்கு வகிக்கிறது. மே லும் சுற்றுலாத்தலத்தின் ஆ தாரமாக விளங்கும் மலைக்குன்றின் அடிவாரத்தில் அ மைந்து தமிழகத்தின் தென்பழனி என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது. க ழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் ஏராளமான நடந்து வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி நாளன்று நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் கழுகுமலை மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அடுத்தாற்போல் அதிகம் பக்தர்கள் விரும்பும் புனிதத்தலமாக கழுகுமலை திகழ்கிறது. ஏனெனில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கெ ன்று தனியாக விமானம் இல்லாததாலும், கருவறையை சு ற்றி வந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றாலும் கழுகுமலை மலையை சுற்றி வரவேண்டும். இதனாலேயே கழுகுமலை பவுர்ணமி கிரிவலம் இப்பகுதி பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பு மிகுந்த வழிபாடாக உள்ளது.இந்நிலையில் இம்மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதையொட்டி கழுகுமலை, குருவிகுளம், சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கழுகாசலமூர்த்தி கோயில் தெற்கு வாசலில் ஒன்று கூடினர். தொடர்ந்து ஹரஹர சங்கரா, சிவசிவ சங்கரா, கழுகுமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கழுகாலமூர்த்திக்கு அரோகரா என்ற பக்த கோஷங்கள் எழுப்பியபடி மேலக்கிரிப்பிரகார வீதி வழியாக மலையை சுற்றி வந்தனர்.நிகழ்ச்சியில் பிரதோஷக்குழு தலைவர் முருகன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar