Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை ... ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 16ம் நாள் விழா ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
மனதால் நினைப்பதை வாக்கால் சொல்ல வேண்டும்
எழுத்தின் அளவு:
மனதால் நினைப்பதை வாக்கால் சொல்ல வேண்டும்

பதிவு செய்த நாள்

30 டிச
2021
12:12

புதுச்சேரி: மனம், வாக்கு, செயல் என்னும் முக்கரணங்களை எம்பெருமானிடம் ஒடுங்கி பூரண சரணாகதி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு, தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில் முன்னாள் நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவை 14வது பாசுரத்தில் திருப்பாணாழ்வாரை ஆண்டாள் துயில் எழுப்புகிறார். இந்த பாசுரத்தில் ஆத்மகுண பூர்த்தி எனப்படும் உள்ளுறை பொருளாக கூறப்பட்டுள்ளது. நேரடியாக கண்டு உணர்வது, ஏற்கனவே உணர்ந்து அறிந்தவற்றால் அனுமானித்து உணர்வது, வேதங்களும் சாஸ்திரங்களும் உணர்த்துவதை அறிவது என மூன்று பரிமாணங்களை, ஆண்டாள் 14வது பாசுரத்தில் சொல்லி உள்ளார். கர்ம பலன் என்பது மனம், வாக்கு, செயல் என்ற மூன்றையும் சார்ந்தது. மனம், வாக்கு, செயல் என்னும் முக்கரணங்களை எம்பெருமானிடம் ஒடுங்கி பூரண சரணாகதி செய்ய வேண்டும். எம்பெருமானிடம் எவ்வாறு சரணாகதி செய்ய வேண்டும் என்பதை, உள்ளம், உரை, செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக்கெடுத்து இறையுள்ள லொடுங்கே என்று நம்மாழ்வார் உபதேசித்துள்ளார். எதை மனதால் நினைக்கிறோமோ அதை வாக்கால் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னதையே செய்ய வேண்டும். உள்ளத்தில் எண்ணியதை கரவாது, வாயால் உரைப்பதே வாய்மையாகும்.வாய்மையால் உரைத்தவாறு மெய்யால் செயல் புரிவதே மெய்மையாகும். மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளும் முரண்படாது, தத்தம் இயல்பில் நிற்பதே துாய்மை என்று வேதம் உரைக்கின்றது.அந்த முப்பொறி துாய்மைதான் திரிகரண சுத்தி. வேதம் உரைத்த இந்த தத்துவத்தை தான் ஆண்டாள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பாசுரத்திலும் ஏதோ ஒரு வகையில் உள்ளுறை பொருளாக உணருமாறு, முன்னோர் வகுத்த வழி நின்று அதை அருளியுள்ளார். இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar