Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் பெருமாள் பகல் ... வேணுகோபால சுவாமி கோவிலில் திருஅத்யாயன உற்சவம் வேணுகோபால சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
ஆத்மாவை தெரிந்து கொள்ள உதவும் ஞானவிளக்கு எம்பெருமான்; ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம்
எழுத்தின் அளவு:
ஆத்மாவை தெரிந்து கொள்ள உதவும் ஞானவிளக்கு எம்பெருமான்; ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
11:01

புதுச்சேரி-ஆத்மாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள, எம்பெருமான் என்ற ஞான விளக்கு தேவைப்படுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.

புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைபெறும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் நேற்று உபன்யாசம் செய்ததாவது:ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவருமே கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணன் அவதரித்த போது, ருக்மணி, சத்யபாமா, நப்பின்னை என அவதரித்து கண்ணனை கரம் பிடித்தவர்கள்.இந்த மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டு மூன்று பாசுரங்கள் அருளியுள்ளதை கவனிக்க வேண்டும்.ஆண்டாள், நப்பின் னையை மட்டும் குறிப்பிட்டு சொல்லக் காரணம். ருக்மணியும், சத்யபாமாவும் கிருஷ்ணனை மணந்த பிறகுதான் நந்தகோபனுக்கு மருமகள்கள் ஆகின்றனர்.ஆனால் நப்பின்னையோ ஆயர் குலத்தில் யசோதையின் சகோதரனுக்கு மகளாக பிறந்தவள் என்பதால், பிறந்த உறவால் முன்னும், மணந்த உறவால் பின்னும் நந்தகோபனுக்கு மருமகள் என்ற பெருமையை பெற்றவள்.எனவே, மற்ற இரு தேவியர்களை விட ஆண்டாள் நப்பின்னையை மட்டும் குறிப்பாக சிறப்பித்து அழைக்கிறார் எனலாம்.எண்ணெய் விட்டால் பிரகாசிக்கும் ஜடப் பொருளாகிய விளக்கு அசித் என்றும், பரமாத்மாவை உணர்ந்தால் பிரகாசிக்கும் ஜீவத்மாவாகிய விளக்கு சித் என்றும், எப்போதுமே பிரகாசமாக உள்ள நந்தா விளக்கு பகவானாகிய பரமாத்மா எனும் ஸ்ரீமத் நாராயணன் என, இப்பாசுரத்தில் ஆண்டாள் குத்துவிளக்கெரிய என்ற சொல்லால் உணர்த்தி உள்ளார்.குத்து விளக்கு என்ற மங்கள தீபம் ஒரு தத்துவத்தை கொண்டுள்ளது. ஒரு விளக்கு தான். ஆனால் ஐந்து முகங்கள் உண்டு.குத்து விளக்கின் ஐந்து முகங்களும் எம்பெருமானின், பரத்துவ, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்ற ஐந்து நிலைகளை கொண்டுள்ளது. குத்து விளக்கின் ஐந்து முகங்களும் ஏற்றப்பட்டு, எரியும் போது பூர்ணமான விளக்காகிறது.மேல் நோக்கி எரியும் ஜோதியானது, நடுவில் இருக்கும் ஒரு கோபுரம் போன்ற அந்த இடத்தை பிரதானமாக வைத்துக்கொண்டு இருக்கின்றது.

இதுதான் நம் ஆத்மா. விளக்கின் ஐந்து முகங்கள் பஞ்ச இந்திரியங்கள். இந்த ஆத்மா உலக விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஐந்து முகங்களான பஞ்ச இந்திரியங்களால் முயற்சிக்கிறது. நிலை பெறுகிறது.அதனால் ஆத்மாவிற்கு ஞானம் உண்டாகிறது. வெளியுலக ஞானத்தை கொண்டு தான் ஆத்மாவின் யாத்திரை நடக்கிறது. தவிர, இந்த ஆத்மாவை சுற்றி இருக்கும் இடத்துக்கும் இந்த ஐந்து ஜோதிகளால் ஓரளவு வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் ஆத்மாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள, ஆத்ம ஞானம் உண்டாக, வேறு ஒரு ஞான விளக்கை நாம் நாட வேண்டும். அந்த ஞான விளக்கு தான், பரமாத்மாவான எம்பெருமான்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar