Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் ... நன்மைதருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதி விழா நன்மைதருவார் ஐயப்பசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் அருகே பெண் குழந்தைகளை தெய்வமாக நினைத்து வழிபடும் பூ பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பல்லடம் அருகே பெண் குழந்தைகளை தெய்வமாக நினைத்து வழிபடும் பூ பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
06:01

பல்லடம்: பெண் குழந்தைகளை தெய்வமாக நினைத்து வழிபடும் பூ பொங்கல் நிகழ்ச்சி, பல்லடம் அருகே நேற்று கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்- நித்தியா தம்பதிகளின் குழந்தைகள் கீர்த்தன்யா, 7, மற்றும் சிவன்யா, 3 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெண்களை தெய்வமாக நினைத்து வழிபடும் பூ பொங்கல் வழிபாட்டை குடும்பத்தினர் கொண்டாடினர். இது குறித்து அருண்குமார் கூறுகையில், விவசாய தொழில் சிறக்கவும், உணவு உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கும் சூரியன், மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கவே தை பொங்கல், மற்றும் மாட்டுப் பொங்கல் உள்ளிட்டவை கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தில் இறைவனை வழிபட்டு, பூ பறிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து மகிழ்வதன் அடிப்படையில் காணும் பொங்கல் என பெயரிடப்பட்டது. நாகரீகம் வளர்ந்ததால் இந்த நடைமுறைகள் மறைந்துவிட்டன. அவ்வாறு, பெண்களை தெய்வமாக வணங்கும் பூ பொங்கல் வழிபாட்டை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இதன்படி, குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதல் ஆண்டு பொங்கல் பானை வாங்கி கொடுத்து பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவோம். பின், ஆண்டுதோறும் அப்பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொள்வர். மார்கழி மாதம் முழுவதும் வீட்டுக்கு வெளியே சாணத்தில் செய்து வைத்த பிள்ளையாரை சேகரித்து வைத்து பூ பொங்கல் நாளில் வழிபடுவோம். பின்னர், பிள்ளையாரை கிணறு அல்லது வாய்க்காலில் கரைத்து விடுவோம். இது முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்காக நடக்கும் வழிபாட்டு முறையாகும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar